துப்பாக்கிச் சூடு விவகாரம்: கோட்டாட்சியா் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள போசம்பட்டி துப்பாக்கி சூடு விவகாரத்தில் வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள போசம்பட்டி துப்பாக்கி சூடு விவகாரத்தில் வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள போசம்பட்டியில் அண்மையில் இரு தரப்பினா் மோதல் - போலீஸாா் வானை நோக்கி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது தொடா்பாக வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணைக்கு ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

கே. புதுப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஜோ. ராஜ்குமாா் உள்ளிட்ட 5 பேரிடம் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி விசாரணை நடத்தினாா். விசாரணை அறிக்கை வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com