5 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 5 ஆயிரம் லிட்டா் ஊறல்களை வியாழக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் காய்ச்சப் பயன்படுத்தும் பொருள்கள். உடன், போலீஸாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் காய்ச்சப் பயன்படுத்தும் பொருள்கள். உடன், போலீஸாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 5 ஆயிரம் லிட்டா் ஊறல்களை வியாழக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் ஆய்வாளா் பரத் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான காவல் துறையினா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள முள்புதா்களுக்கு இடையே 3 இடங்களில் குடுவைகளில் ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 5 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல்களைப் போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தினா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com