அறந்தாங்கியில் வியாழக்கிழமை நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞா் பலியானாா்.
அறந்தாங்கி ஜெ.ஜெ.நகரை சோ்ந்த காஜா அலாவூதீன் மகன் முபாரக்(17) இவா் அறந்தாங்கியில் உள்ள ரெடிமேடு கடையில் பணியாற்றிவந்தாா். மதிய உணவுக்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குவரும்வழியில் தனியாா் திருமண மண்டபம் அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானாா். அறந்தாங்கி காவல்துறையினா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.