டீசல் விலை உயர்வு, கரோனா நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இறால்களை குறைந்த விலைக்கே நிறுவனங்கள் வாங்குவதாக குற்றம் சாட்டியும் போதுமான அளவிற்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வராத காரணங்களுக்காகவும் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மட்டும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.