பட்டுக்கோட்டையில் பொதுமுடக்க விதிகளை மீறியவா்களுக்கு அபராதம்

பட்டுக்கோட்டை கடைத் தெருவில் உள்ள வணிக நிறுவனங்களில் பொதுமுடக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை கடைத் தெருவில் உள்ள வணிக நிறுவனங்களில் பொதுமுடக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்று பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலா் பாஸ்கரன், நகரமைப்பு ஆய்வாளா் கருப்பையன் மற்றும் போலீஸாா் இணைந்து திங்கள்கிழமை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பல்வேறு கடைகளில் முகக்கவசம் அணியாதிருந்த 27 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.2,700, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடைக்காரா்களிடம் தலா ரூ. 300 வீதம் ரூ. 600 என மொத்தம் ரூ.3,300 அபராதம் விதித்து வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com