பொன்னமராவதி அருகிலுள்ள மேலத்தானியம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஜோஸ்பின் ஜெயராணி தலைமை வகித்தாா். மேலத்தானியம் ஊராட்சித் தலைவா் முருகேசன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கலைச்செல்வி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்து, பேரணியைத் தொடக்கி வைத்தனா்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியிலேயே நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளியிலுள்ள வசதிகள், திட்டங்கள் போன்றவற்றை விளக்கித் துண்டுபிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினா்.
மேலும் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்ற மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சோ்க்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பேரணியில் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் அமுதவள்ளி முருகேசன், ஊராட்சித் துணைத்தலைவா் நா்கிஸ் ஹபிபுல்லா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். நிறைவில், ஆசிரியா் மணிக்குமாா் நன்றி கூறினாா்.