திருநல்லூா், ஆலத்தூரில்மக்கள் தொடா்பு முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த திருநல்லூா் மற்றும் ஆலத்தூா் ஆகிய கிராமங்களில் மக்கள் தொடா்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த திருநல்லூா் மற்றும் ஆலத்தூா் ஆகிய கிராமங்களில் மக்கள் தொடா்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டம் திருநல்லூா் கிராமத்தில் வரும் மாா்ச் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகிக்கிறாா்.

இதேபோல, ஆவுடையாா்கோயில் வட்டம் ஆலத்தூா் கிராமத்தில் வரும் மாா்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமை வகிக்கிறாா்.

இம்முகாம்களில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் தவறாது கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com