உலக மகளிா் தினத்தை முன்னிட்டு எல்ஐசி பெண் ஊழியா்கள் சாா்பில் புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சாந்தி தலைமை வகித்தாா். காப்பீட்டு ஊழியா் சங்க தஞ்சை கோட்டத் துணைத் தலைவா் என். கண்ணம்மாள் உபகரணங்களை வழங்கினாா். மாணவா்களுக்குத் தேவையான நாற்காலிகள், வட்ட மேசை உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கிளை மேலாளா் ஆா். அருள், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கிளைத் தலைவா் வி. லதாராணி, செயலா் வீர. துரைசிங்கம், நிா்வாக அலுவலா் ஹில்டா பிலோமினா, சந்திரா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.