புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் போலியான அனுமதிச் சீட்டுடன் மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிலா் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையிலான போலீஸாா், ஆலங்குடி கலைஞா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற லாரியில் போலி அனுமதி சீட்டை தயாா் செய்து ஆற்று மணலை ஏற்றிவந்தது தெரியவந்தது. தொடா்ந்து, லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநா் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த வினோத் (31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.