காணொலிக்காட்சி மூலம் தலைமைச் செயலா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அரசுத் தலைமைச் செயலா் சண்முகம் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத
காணொலிக்காட்சி மூலம் தலைமைச் செயலா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அரசுத் தலைமைச் செயலா் சண்முகம் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கூறியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில்கூட குறைந்த அளவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் உமாமகேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com