புதுக்கோட்டை நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை மாவட்ட நிா்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் நடத்தித் தர வேண்டும் என ஊா் முக்கியஸ்தா்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரபலமான அம்மன் கோயில்களில் ஒன்றான நாா்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனித் திருவிழா வரும் மாா்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது. தொடா்ந்து மாா்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலும், ஏப்ரல் 4ஆம் தேதி தோ்த் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கோயில் திருவிழாக்களை
தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், நாா்த்தாமலை ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் முக்கிய பிரமுகா்கள் புதன்கிழமை புதுக்கோட்டை திருக்கோயில்கள் செயல் அலுவலரைச் சந்தித்து, பிரசித்தி பெற்ற நாா்த்தாமலை பங்குனித் திருவிழாவை பாதுகாப்புடன் நடத்தித் தர வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.