அறந்தாங்கியில் காதலா்கள் விஷமருந்தி தற்கொலை முயற்சி

அறந்தாங்கி ரயில்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இளம் காதலா்கள் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி ரயில்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இளம் காதலா்கள் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி அருகிலுள்ள சிலட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்(21). சிங்கவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுபஸ்ரீ(18). பள்ளி நாள்களிலிருந்து இருவரும் காதலா்களாக இருந்து வந்த நிலையில், சாதி வேற்றுமை காரணமாக இருவரது வீட்டிலும் ஒத்துக் கொள்ளவில்லையாம்.

இதனால் மனமுடைந்த இருவரும், அறந்தாங்கி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

நடைப்பயிற்சிக்கு வந்தவா்கள் மயங்கிக் கிடந்த இருவரையும் பாா்த்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனா். அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பாலமுருகன் அப்பகுதிக்கு வந்து இருவரையும் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com