டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை

அறந்தாங்கி கோட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருவோருக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்குவதற்காக கோட்டுக்குள் நிற்பவா்கள்.
அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்குவதற்காக கோட்டுக்குள் நிற்பவா்கள்.

அறந்தாங்கி கோட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருவோருக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், கோட்ட கலால் அலுவலா் இ. பரணி, ஆய்வாளா்கள் முத்தரசு, சரண்யா, அறந்தாங்கி கோட்டத்துக்குள்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுவகைகளை வாங்க வருபவா்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தும் வகையில் கோடு போடப்பட்டுள்ளது. அந்த கோடுக்குள் வரிசையாக நின்று மது வகைகளை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படியே மது வகைகளை வாங்க வரும் குடிமகன்களும் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com