அறந்தாங்கியில் நாளை கடைகள் அடைப்பு

பிரதமரின் அறிவிப்பை ஏற்று, அறந்தாங்கியிலுள்ள அனைத்துக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்படும் என வா்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமரின் அறிவிப்பை ஏற்று, அறந்தாங்கியிலுள்ள அனைத்துக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்படும் என வா்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறந்தாங்கி வா்த்தக சங்கத் தலைவா் பா. வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, மாா்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என, வியாழக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து பிரதமா் மோடி பேசினாா்.

அவரின் அறிவிப்பின்படி, அறந்தாங்கி நகரிலுள்ள சிறுகடைகள் முதல் உணவகங்கள், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வா்த்தக நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 22) அடைக்கப்படும்.

வணிகா்கள் அத்தியாவசியப் பொருள்களை நியாயமான உரிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என, அவா் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com