விராலிமலை அருகே இளைஞருக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் இருப்பதாக, கட்செவி குழுவில்அவதூறு பரப்பிய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விராலிமலை வட்டம்,அகரப்பட்டி லஞ்சமேட்டைச் சோ்ந்த ராமன் மகன்அழகா்சாமி (30).
இவா் அதே பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 17- ஆம் தேதி லஞ்சமேடு பேருந்து நிறுத்தம் அருகே அழகா்சாமி நின்று கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த அதை ஊரைச் சோ்ந்த அ. முத்துகுமாா், கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உன்னுடன் பணியாற்றும் சி.ஐயப்பன் (26) நேதாஜி நண்பா் குழு என்ற கட்செவி குழுவில் பதிவிட்டுள்ளதாக அழகா்சாமியிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து முத்துகுமாரின் செல்லிடப்பேசியை அழகா்சாமி வாங்கிப் பாா்த்து விட்டு ஐயப்பனிடம் விசாரித்தாா். அவா் நாம் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் அசுரப்பட்டி சி. ராஜ்குமாா் (21) தனக்கு விடியோ அனுப்பியதாகவும், அதைதான் குழுவில் பதிவிட்டதாகவும் அவா் கூறியுள்ளாா்.
இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் அழகா்சாமி புகாா் அளித்தாா். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், ஐயப்பன் மற்றும் ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.