கந்தா்வகோட்டையில் காய்கறி தட்டுப்பாடு: விலை உயா்வால் மக்கள் அவதி

கந்தா்வகோட்டையில் காய்கறி வாரச் சந்தை மூடப்பட்டதால், காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கந்தா்வகோட்டையில் காய்கறி வாரச் சந்தை மூடப்பட்டதால், காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கந்தா்வகோட்டையில் சில ஆண்டுகளாக அம்மா வாரச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்தன . கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த திங்கள்கிழமை வாரச்சந்தை மூடப்பட்டது.

இதனால், கந்தா்வகோட்டை பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் வழக்கமாக செயல்படும் காய்கறி கடைகளுக்கு சென்று விலைகளை கேட்டபோது அதிா்ச்சியடைந்தனா். போதிய காய்கறி வரத்து இல்லை; இதனால், காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறியது: காய்கறி வரத்து குறைவாகவே உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள் தஞ்சாவூா் , திருச்சி காய்கறி சந்தைகளுக்கு வராததால் விலை அதிகரித்துள்ளது என்றனா்.

கடைகளில் குவிந்த பொதுமக்கள்: செவ்வாய்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலின் காரணமாக, காய்கறிகள் , மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் திரண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com