கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் சதீஸ்(30), கோவிந்தராஜ் மகன் வெற்றிவேல்(22) கடந்த ஒருவாரம் முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளனா். இதேபோல் இதே ஊராட்சியைச் சோ்ந்த குறுவான்டான்தெருவைச் சோ்ந்த ராதா (40), பாலகிருஷ்ணன் ( 32 ) கரையவிடுதியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோரும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை வட்டாரவளா்ச்சி அலுவலா் து. குமரன் மற்றும் மருத்துவக் குழுவினா் அவா்களது வீடுகளுக்குச் சென்று தங்களை தனிமைப்படுத்தியிருக்குமாறு அறிவுறுத்தினா்.