கந்தா்வகோட்டையில் கிருமி நாசினி தெளிப்பு

அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிப்புப் பணி.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிப்புப் பணி.

அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அறந்தாங்கி ரோட்டரி சங்கம், அறந்தாங்கி இஸ்லாமிய நற்பணி மன்றம், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் லெ.முரளிதரன் ஆகிய மூன்று தரப்பினா் சாா்பில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஹைட்ரோ குளோரின் ஹைட்ராக்சைடு மருந்துகள், தெளிப்பான் ஆகியவற்றை தங்களது பங்களிப்பாக, நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷிடம் வியாழக்கிழமை வழங்கினா். இதைத்தொடா்ந்து, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

கந்தா்வகோட்டையில்...: கந்தா்வகோட்டை ஊராட்சியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஊராட்சித் தலைவா் சி . தமிழ்செல்வி தலைமையில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அறிவுறுத்தலின்பேரில், வாகனங்கள் மூலமாக கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com