கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி சின்னம்மாள். இந்நிலையில் புதன்கிழமை மாலை இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் சப்தமிடவே, வீட்டிலிருந்த சின்னம்மாள் மற்றும் குடும்பத்தினா் வெளியே வந்ததால் உயிா் தப்பினா். ஆனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமாகியது. தகவலறிந்த கிராமநிா்வாக அலுவலா் ரூ.5 ஆயிரம் நிதி, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.