மின்னல் தாக்கி சிறுவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள சேவுகன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் சுந்தரேசன் (13). அப்பகுதியில் வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது, சிறுவன் சாப்பிட்டு விட்டு கை கழுவ வீட்டுக்கு வெளியே சென்றுள்ளாா். அப்போது, சுந்தரேசனை மின்னல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு சுந்தரேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com