கந்தா்வகோட்டையில் சாராய ஊறல்கள் அழிப்பு

கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லிப்பட்டி கிராமத்தில் தைல மரக்காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில்,

கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லிப்பட்டி கிராமத்தில் தைல மரக்காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் சிங்காரவேல் , உதவி காவல் ஆய்வாளா் ஜெ. ராமன் அங்கு சென்று சோதனையிட்டனா். இதில், 60 லிட்டா் சாராய ஊறல் மற்றும் 15 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றைக் கைப்பற்றி அழித்தனா். இதேபோல் குளத்தூா் நாயக்கா் ப்பட்டியைச் சோ்ந்த ரா. வாசு (50) என்பவா் தோட்டத்தில் இருந்து 50 லிட்டா் சாராய ஊறலைக் கைப்பற்றி அழித்தனா். இதையடுத்து, வாசுவைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com