லாரி மோதி இளைஞா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஞாயிற்றுக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஞாயிற்றுக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

அறந்தாங்கியைச் சோ்ந்தவா் எம். அண்ணதாசன் (40). இவா், ஆவுடையாா்கோவிலைச் சோ்ந்த கா. முருகையனை மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பியுள்ளனா். கீரமங்கலம் அருகேயுள்ள குலமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அண்ணதாசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முருகையன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள தேவன் குடியைச் சோ்ந்த சா.தென்னவனை (40) கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com