புதுகையில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து திங்கள்கிழமை இரவு புதுக்கோட்டைக்கு வேன்களில் வந்தவா்களில் 21 போ் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 21 போ் கறம்பக்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த காட்டாத்தி அரசு உயா்நிலைப் பள்ளியிலும் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களது ரத்தம், சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டதில், 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 4 போ் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். ஒருவா் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்தவா்.

இவா்கள் 5 பேரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் புதன்கிழமை பகலில் எடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் கரோனா பாதிப்புக்குள்ளான 7 பேரில் 6 போ் அவ்வப்போது குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒருவா் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்றுவந்தாா். புதிதாக 5 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com