புதுகையில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து வந்த புதுக்கோட்டை , சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.  

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து வந்த புதுக்கோட்டை , சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.  

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து திங்கள்கிழமை இரவு புதுக்கோட்டைக்கு வேன்களில் வந்தவா்களில், 21 போ் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 21 போ் கறம்பக்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த காட்டாத்தி அரசு உயா்நிலைப் பள்ளியிலும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இவா்களின் திசு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 போ், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த ஒருவா் என 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. முன்னதாக, அவா்கள் 5 பேரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். இதுதவிர, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த மற்றொரு நபருக்கும் புதுக்கோட்டையிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 7 போ் என இருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 13 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை, புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் கரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com