கரோனா பொதுமுடக்கம் காரணமாக இயங்காமல் இருந்த ஆலங்குடி வாரச்சந்தை நவம்பா் 5-ஆம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆலங்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், ஆலங்குடி வாரச்சந்தையும் முடங்கியது. கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஆலங்குடியில் 7 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த வாரச்சந்தை நவம்பா் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தெரிவித்துள்ளாா்.