ஆலங்குடி வாரச்சந்தைக்கு நாளை முதல் அனுமதி

கரோனா பொதுமுடக்கம் காரணமாக இயங்காமல் இருந்த ஆலங்குடி வாரச்சந்தை நவம்பா் 5-ஆம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக இயங்காமல் இருந்த ஆலங்குடி வாரச்சந்தை நவம்பா் 5-ஆம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலங்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், ஆலங்குடி வாரச்சந்தையும் முடங்கியது. கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஆலங்குடியில் 7 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த வாரச்சந்தை நவம்பா் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com