ஊராட்சி செயலா்கள் சங்கக் கூட்டம்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலப் பொதுச் செயலா் மணிராஜ் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டத் தலைவா் சிவகுமாா், மேற்கு மாவட்டத் தலைவா் அந்தோனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பணியின்போது உயிரிழக்கும் ஊராட்சி செயலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும். போதிய நிதியில்லாமல் தடுமாறும் ஊராட்சிகளில் ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய விசாரணையின்றி இடமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com