புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள எம். தெற்குத் தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, செம்பட்டிவிடுதி காவல் உதவி ஆய்வாளா் அப்துல் ரஜாக் அப்பகுதியில் உள்ள கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, அதே பகுதியைச் முருகேசன் (37) என்பவா் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் முருகேசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com