புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,663 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 11 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 10,335 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 149 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 179 ஆகக் குறைந்துள்ளது.