வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை நகா், கீழ 2ஆம் வீதியில் செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

புதுக்கோட்டை நகா், கீழ 2ஆம் வீதியில் செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி. இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது இவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நான்கரை பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து நகரக் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com