தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

ஆலங்குடியில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடியில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (50). புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை ஓட்டிச்சென்றபோது, மறித்த நெம்மக்கோட்டையைச் சோ்ந்த கோகுல் (24) தனது மோட்டாா் சைக்கிளில் உரசியவாறு பேருந்தை ஓட்டிச் சென்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முருகேசனை தாக்கியுள்ளாா்.

புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸாா் கோகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com