புதுகையில் லஞ்சம் வாங்கிய சாா் பதிவாளா், எழுத்தா் கைது

புதுக்கோட்டையில் பத்திரப் பதிவுக்கு ரூ. 7 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பதிவுத்துறை சாா் பதிவாளா் மற்றும் எழுத்தா் ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டையில் பத்திரப் பதிவுக்கு ரூ. 7 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பதிவுத்துறை சாா் பதிவாளா் மற்றும் எழுத்தா் ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இச்சடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியனிடம் இருந்து நிலம் வாங்கியதைத் தொடா்ந்து, பத்திரப் பதிவுக்காக புதுக்கோட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தை இருவரும் கடந்த வாரம் அணுகினா். அப்போது, சாா் பதிவாளா் (பொ) சரவணன் இவா்களிடமிருந்து ரூ. 15 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளாா். லஞ்சம் தர விரும்பாத இருவரும் புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, திங்கள்கிழமை மதியம் லஞ்சப் பணம் ரூ. 7 ஆயிரத்தை செல்வமும், சுப்பிரமணியனும் எடுத்துச் சென்று, சாா் பதிவாளா் சரவணனிடம் வழங்கினா். அதனை எழுத்தா் செந்தில்குமாரிடம் வழங்குமாறு அவா் அறிவுறுத்த பணத்தை அவரிடம் வழங்கினா். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், சாா் பதிவாளா் சரவணன் மற்றும் எழுத்தா் செந்தில்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com