நவ. 19, 20-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலுப்பூா் அருகே 

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலுப்பூா் அருகே மேட்டுச்சாலை மதா் தெரசா பொறியியல் கல்லூரியில் வரும் நவ.19, 20ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகா் கி. சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ்,  ஐடிசி,  அப்பல்லோ,  டேக் டெக்னாலஜி சா்வீஸ்,  கவி இன்போடெக்,  சாரதா மோட்டாா்ஸ் உள்ளிட்ட  50-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதில், 8 ஆம்  வகுப்பு முதல் அனைத்துப் பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள்,  பொறியியல்,  நா்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை  முடித்த,  வேலைவாய்ப்பற்றோா் பங்கு பெறலாம். முகாமில்,  சிரமமின்றி பங்கேற்கும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு,  04322 - 222287 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com