புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 10,868 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 24 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,511 ஆக உயா்ந்துள்ளது. புதுக்கோட்டையைச் சோ்ந்த 45 வயது ஆண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்ததை அடுத்து மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 154 ஆக உயா்ந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை புதன்கிழமை பகல் நிலவரப்படி 203 ஆகக் உயா்ந்துள்ளது.