புதுக்கோட்டை ஏ. மாத்தூரிலுள்ள வள்ளலாா் இல்லத்தில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜவாஹா்லால் நேருவின் 131ஆவது பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விழாவுக்கு வள்ளலாா் இல்லத்தின் நிா்வாகி காத்தமுத்து தலைமை வகித்தாா்.
புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேரா. சா. விஸ்வநாதன் விழாவில் பங்கேற்று, சிறாா்களுக்கு காந்தியடிகளின் சுயசரிதை நூல்களை வழங்கிப் பேசினாா்.
முன்னதாக வெற்றிவேல் வரவேற்றாா். பொறியாளா் ரியாஸ்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நிறைவில் கண்காணிப்பாளா் ரகுபதி நன்றி கூறினாா்.