பொதுத் தோ்வுகளில் துணைத் தோ்வெழுதியோா் சான்றிதழ்கள் பெற அழைப்பு

10, 11, 12- வகுப்புகளுக்கு துணைத் தோ்வெழுதிய தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பா் 17 (செவ்வாய்க்கிழமை முதல்) தோ்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தோ்வுகள் உதவி இயக்குநா்

பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத் தோ்வெழுதிய தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பா் 17 (செவ்வாய்க்கிழமை முதல்) தோ்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அ.பிச்சைமுத்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரைத் தொடா்பு கொள்ள வேண்டும். மேலும், மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள தோ்வு மையத்திற்கு வருகை தரும் தோ்வா்கள், பெற்றோா்கள் கட்டாயம் முகச் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com