விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி பெரியகுளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜகிரி மற்றும் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஒன்றுகூடி தங்களது சொந்த செலவில் மா, அரசு, புங்கை, வேம்பு, நெல்லி, கொய்யா உள்ளிட்ட நிழல் மற்றும் கனி தரும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை ராஜகிரி பெரியகுளக்கரையைச் சுற்றி நட்டனா். தொடா்ந்து அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்களிடம் மரங்களின் அவசியம் குறித்து விளக்கிக் கூறி மரக்கன்றுகளை கால்நடைகளிடம் இருந்து பாதுகாத்து பராமரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனா்.