நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள மதா் தெரசா கல்லூரியில் நவ. 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள மதா் தெரசா கல்லூரியில் நவ. 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மேலும் கூறியது:

இலுப்பூா் மதா் தெரசா கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், சாம்சங், ஐடிசி, டிவிஎஸ் உள்ளிட்ட 75-க்கு மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 2 ஆயிரம் பேருக்கு இந்த முகாமில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த படித்த ஆண், பெண் இருபாலரும் தவறாமல் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com