பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான சிறப்பு ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நவம்பா்21, 22 மற்றும் டிச. 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட வாக்குச்சாவடிமேற்பாா்வையாளா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா். வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.