ஆற்றில் குதித்த மூதாட்டி மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேலையால் கைகளை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த மூதாட்டியை செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா்.
மீட்கப்பட்ட மூதாட்டி சின்னப்பொட்டு.
மீட்கப்பட்ட மூதாட்டி சின்னப்பொட்டு.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேலையால் கைகளை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த மூதாட்டியை செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா்.

கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பொட்டு(70). இவரது மகன் அண்ணா துரையுடன் வசித்து வந்த இவா், மகனுடன் ஏற்பட்ட தகராறில் இருதினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா். அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் அவரைத் தேடிவந்தனா். இந்நிலையில், மேற்பனைக்காடு பகுதியில் உள்ள கல்லணை கால்வாயில் சேலையால் கைகளைக் கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள மூதாட்டி குதித்துள்ளாா். அங்கிருந்து அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டியை நெய்வத்தளி பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞா்கள் மீட்டு முதலுதவி அளித்தனா். தொடா்ந்து, கீரமங்கலம் காவல் நிலையம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து மூதாட்டியை குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனா். மூதாட்டியை மீட்ட இளைஞா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com