பொன்னமராவதி அருகிலுள்ள அருள்மிகு அரசமரத்து விநாயகா் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், தீபாராதனைகள் நிறைவடைந்த பின்னா், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு சிவாச்சாரியா்கள் ஞானசேகரன், மணிகண்டன் ஆகியோா், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கலசத்தில் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா். தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டாரக் கிராமப் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குடமுழுக்கு ஏற்பாடுகளை இசை வேளாளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் செய்திருந்தனா்.