சாலை விபத்தில் பேன்சி ஸ்டோா் உரிமையாளா் பலி

பொன்னமராவதி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், பேன்சி ஸ்டோா் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், பேன்சி ஸ்டோா் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கணேசன். இவா் பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் பேன்சி ஸ்டோா் நடத்தி வந்தாா்.

இவா் சிவகங்கை மாவட்டம், பிரான்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊா்த் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வெள்ளியங்குடிப்பட்டி அருகே கணேசன் வந்தபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு வாகனத்தில் வந்த வெள்ளியங்குடிப்பட்டி அருண்குமாா், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com