கவிஞா் சினேகன் ஓட்டிய காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா், திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் ஊனையூா் அருகே ஆலமரத்துக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அருண்பாண்டி(28).
இவா், நவம்பா்15-ஆம் தேதி இரவு சவேரியாா்புரத்தில் இருந்து திருமயத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.
கொசப்பட்டி கண்மாய் பகுதியில் வந்தபோது, இவரது வாகனத்தின் மீது எதிரே திரைப்படப் பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலருமான எஸ்.சினேகன் ஓட்டிச் சென்ற காா் மோதியது.
இதில் காயமடைந்த அருண்பாண்டி, திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருமயம் காவல்துறையினா், சினேகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.