ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், வியாழக்கிழமை இரவு பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகிலுள்ள மாங்குடி ஊராட்சி, சாளுவன்தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் அஜய் (17). மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் அஜய் கடைக்குச் சென்ற போது, காகித ஆலைச்சாலை பேருந்து நிறுத்தம் வந்த சுமை ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.