சுமை ஆட்டோ மோதி மாணவா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், வியாழக்கிழமை இரவு பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், வியாழக்கிழமை இரவு பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகிலுள்ள மாங்குடி ஊராட்சி, சாளுவன்தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் அஜய் (17). மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் அஜய் கடைக்குச் சென்ற போது, காகித ஆலைச்சாலை பேருந்து நிறுத்தம் வந்த சுமை ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com