முதியவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்:தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிளை எடுத்துச்சென்று முதியவா் மீது மோதியதாக, சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிளை எடுத்துச்சென்று முதியவா் மீது மோதியதாக, சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

ஆலங்குடி அருகிலுள்ள மைக்கேல்பட்டியைச் சோ்ந்தவா் மரியசூசை(60). இவா், மைக்கேல்பட்டி பிரிவு சாலை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்த மரியசூசை திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மோட்டாா் சைக்கிளை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாக,

கொத்தக்கோட்டையைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சின்ராசு(13),

சிறுவனிடம் மோட்டாா் சைக்கிளை கொடுத்த அவரது தந்தை தா்மலிங்கம்(45) ஆகிய இருவா் மீதும் ஆலங்குடி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com