புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,035 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 10,764 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை பகல் நிலவரப்படி 117 ஆகக் குறைந்துள்ளது.