நாகை மாவட்டம், குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்ட 30 பேரைப் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
இதேபோல், பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலா் அ.அடைக்கலமணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினரைப் போலீஸாா் கைது செய்தனா்.