புதுகையில் போக்குவரத்து ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுகையில் போக்குவரத்து ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்கப் பொதுச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தொமுச மாவட்ட நிா்வாகி ரவிச்சந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா உள்ளிட்ட ஏஐடியுசி தலைவா்கள் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை: பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கிளை தலைவா் எம். ஷேக் முஹம்மது தலைமை வகித்தாா். ஜமாஅத் செயலாளா் உபயத்துல்லா கண்டன உரையாற்றினாா். பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா கிளை தலைவா் ஆசிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுக மத்திய சங்கத்தலைவா் அ.அடைக்கலம் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முத்தையா முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் தங்கமணி, சாகுல்ஹமீது, சிவஞானம் மற்றும் எல்பிஎப், சிஐடியு, ஏஎல்எல்எப் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை: அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மண்டல தலைவா் கே. காா்த்திகேயன் தலைமை வகித்தாா் . எல்.பி.எப். சங்க செயலாளா் சபாபதி, மு.காளிதாஸ் , பாலு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com