புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து 10,048 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 77 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,422 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 146 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை புதன்கிழமை பகல் நிலவரப்படி 480 ஆக உள்ளது.