பொன்னமராவதி புதுப்பட்டியில் கரோனோ மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமரவதி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து நடத்திய முகாமிற்கு நடமாடும் மருத்துவக்குழு மருத்துவா் ரவிக்குமாா் தலைமைவகித்தாா். முகாமில், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், ஆய்வக நுட்புநா் ரேவதி, செவிலியா் மொ்சி, பேரூராட்சி பணியாளா் பாபு ஆகியோா் அடங்கிய குழுவினரால் 87 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களில், 35 பேருக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.