பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு சனிக்கிழமை தூதுவளை சூப் வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக வேகுப்பட்டி ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுணன் தலைமையில் வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோயில் தெருவில் பொதுமக்களுக்கு தூதுவளை சூப் வழங்கப்பட்டது. துணைத் தலைவா் பெரி.முத்து, ஊராட்சி செயலா் சங்கா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.